இறுதி கட்ட சாலை தடுப்பு நடவடிக்கைகள்

நேற்றுடன் முடிவடைந்த நிபந்தனைகளுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இறுதிக் கட்ட நடவடிக்கைகள் பல்வேறு இடங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பகாங், குவாந்தான் நோக்கிச் செல்லும் கோம்பாக் டோல் சாவடி அருகே இறுதி நேர சாலை தடுப்பு நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.

இன்று தொடங்கி மீட்சியுறும் நடமாட்டக் கட்டுபாடு ஆணை அமலுக்கு வருகிறது.

இந்த ஆணையின் போது பொதுமக்கள் மாநிலம் கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் நடமாட்டக் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தவிர மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் மாநில எல்லைகளில் போடப்பட்டிருந்த சாலை தடுப்புகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here