கோலாலம்பூர்: செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் கடன்கள் மற்றும் நிதி திருப்பிச் செலுத்துதலுக்கான ஆறு மாத கால அவகாசம் நீட்டிப்பது குறித்து அரசாங்கம் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று நிதியமைச்சர் டத்தோஶ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
நாங்கள் வங்கிகளை கட்டாயப்படுத்தி இதனை நீட்டிக்க செய்ய முடியாது. ஆனால் அவர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவோம் என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) பிரசாராணா தலைமையகத்திற்கு வருகை தந்து செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். வங்கிகள் தங்களைத் தாங்களே முன்வந்து தடையை நீட்டிக்க ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன என்பதை அவர் ஒப்புக் கொண்டார். அதிக நேரம் தேவைப்படுபவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அரசாங்கத்தின் தரப்பில், நாங்கள் இன்னும் வங்கிகளுடன் இணக்கமாக இருந்து வருகிறோம். முடியுமா அல்லது முடியாதா என்ற முடிவு அவர்களுடையது என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், தடையை நீட்டிப்பது எளிமையான முறையில் செய்யப்படலாம் என்பது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ஜாஃப்ருல் கூறினார். தடைக்காலம் ஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தப்பட்டபோது, கடன்களைத் திருப்பிச் செலுத்தும் திறன் இருந்தால், கடன் பெறுபவர்களுக்கு பயனளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு தனிப்பட்ட கருத்தாக உதவி தேவைப்படுபவர்களுக்கு நாங்கள் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் கவனம் செலுத்துவதே முக்கிய வழி என்று அவர் மேலும் கூறினார். தங்களின் கடனை திருப்பி செல்லும் நாள் காலாவதியாகும் வரை காத்திருக்க வேண்டாம். ஆனால் கடன் திருப்பிச் செலுத்துவதில் “தங்கள் வங்கிகளுடன் பேச” தொடங்கவும் கடன் வாங்குபவர்களுக்கு ஜஃப்ருல் அறிவுறுத்துகிறார். தயவுசெய்து உங்கள் வங்கிக்கு சென்று மறுசீரமைப்பு பற்றி விவாதிக்கவும் என்று அவர் கூறினார்.
செப்டம்பர் மாதம் முடிவடையும் ஆறு மாத கடன் தடைக்காலத்தை நீட்டிக்கப் போவதில்லை என்று மலையன் வங்கி பி.டி. (மேபேங்க்) வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அறிவித்தது குறித்து அவரிடம் கருத்து கேட்டதற்கு அவர் மேற்கண்ட பதிலளித்தார்.
மேலும் 30 வெள்ளி மாதாந்திர பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து எல்.ஆர்.டி, எம்.ஆர்.டி, பி.ஆர்.டி மற்றும் ரேபிட் கே.எல் போன்ற பொது போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்வது 40% அதிகரித்துள்ளது என்று ஜஃப்ருல் கூறினார். ஜூன் 15 முதல் 62,000 மை 30 பாஸ்கள் விற்கப்பட்டன. பள்ளிகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்பட்டு பொருளாதாரம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.