புத்ராஜெயா: மீட்பு இயக்கம் கட்டுப்பாட்டு உத்தரவு (எம்.சி.ஓ) விதிமுறைகளை மீறியதற்காக 71 பேரை நேற்று (ஜூலை 1) போலீசார் கைது செய்ததாக தற்காப்பு அமைச்சர் (பாதுகாப்பு) டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 29 பேர் மேற்கட்ட விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 42 பேருக்கு சம்மன்கள் வழங்கப்பட்டதாக வியாழக்கிழமை (ஜூலை 2) தனது தினசரி மாநாட்டில் தெரிவித்தார். குடியேற்ற குற்றங்களுக்காக நாட்டின் ஓப் பென்டெங் சாலைத் தடுப்புகளில் நேற்று 16 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.