செராஸ் தாமான் புக்கிட் செகாரில் அமைந்துள்ள லெஷர் பேரங்காடியில் ரசாயன பொருட்கள் அடங்கியுள்ள இடத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.30 மணியளவில் செராஸ் தீயணைப்பு நிலையம், ஜாலான் துன் ராசாக் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 19 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அந்த பேரங்காடியின் எரிவாயு மற்றும் ரசாயன பொருட்கள் இடங்களில் சோதனையிடப்பட்டது. அங்குள்ள மீட்டரின் அளவுகளை சோதனை செய்ததில் கசிவு எதும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்ததாக தீயணைப்பு குழு தலைவர் முகமட் இர்வான் பின் ஹாசியன் தெரிவித்தார்.
மேலும், அப்பேரங்காடியைச் சுற்றியும் சோதனைகள் நடத்தப்பட்டன. அங்கு ரசாயன கசிவு இல்லை என்பதையும் அங்குள்ளவர்களுக்கும் பாதிப்பு எதும் ஏற்படவில்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.