மென்மையான நில அதிர்வில் சேதமில்லை

சபா மாநிலத்தில் லஹாட் டத்தோ பகுதியில் மென்மயான நில அதிர்வு தாக்கியது. ரிக்டர் அளவில் 3.5 ரிக்டர் அளவிலான இந்த அதிர்வு இரவு 9.20 மணியளவில் சபாவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சபாவின் மனார் பகுதியின் தென்கிழக்கில் சுமார் 16 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் இது நிகழ்ந்ததாக மலேசிய வானிலை ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமியின் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நில அதிர்வினால் சேதங்கள் குறித்து எந்த செய்தியும் இடம்பெறவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here