குடிபோதையில் வாகனம் ஓட்டிய இருவர் கைது

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் சாலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய இருவர் கைது செய்யப்பட்டதாக ஓசிபிடி ஏசிபி நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

நேற்று இரவு 11 மணி தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரையில் நடத்தப்பட்ட சாலை தடுப்பு நடவடிக்கைகளில் மொத்தம் 500 வாகனங்கள் சோதனையிடப்பட்டன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதோடு பல்வேறு சாலை குற்றங்களுக்காக 16 சம்மன்கள் வெளியிடப்பட்டன.

குடிபோதையில் வாகனம் ஓட்டி மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏசிபி நிக் எஸானி எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here