அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவகாரத்தில் பல்டி அடித்துள்ளது. அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்து இருக்கிறது.
முந்தைய தகவல்களில் மொபைலில் டிக்டாக் பயன்படுத்த வேண்டாம், அவசியம் எனில் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பிரவுசர்களில் டிக்டாக் பயன்படுத்தலாம். மேலும் ஸ்மார்ட்போன்களில் டிக்டாக் பயன்படுத்தும் பட்சத்தில் அலுவல் ரீதியிலான மின்னஞ்சல்கள் தொடர்ந்து அனுப்பப்படாது என அமேசான் தெரிவித்தது.
தற்சமயம் அமேசான் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவல்களில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்து இருக்கிறார். மேலும் டிக்டாக் விவகாரத்தில் எங்களது முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.
டிக்டாக் நிறுவனத்திற்கு பயனர் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் அதிக கவனம் கொண்டுள்ளோம் என டிக்டாக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவன கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.