கம்போங் பெம்பானில் கடும் வெள்ளம் 42 வீடுகள் பாதிப்பு

நேற்று முன்தினம் விடியற்காலை தொடங்கி தொடர்ந்து பெய்த கனத்த மழையின் காரணமாக, இக்குடியிருப்பு பகுதி முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது.

சுமார் 42 வீடுகள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான வேளையில், அப்பாதிப்பால் தவித்த 42 குடிம்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, வேறொரு இடத்திற்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்கள் என சிரம்பான. 2 தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் ஷாஸ்வான் சைடி கூறினார்.

சுமார் 2 மீட்டர் அளவுக்கு வெள்ளம் நீர் உயர்ந்துள்ளதாக கூறிய அவர், அங்கிருந்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுமார் 4 மணி நேர தொடர் மழையின் காரணமாக நிகழ்துள்ள இவ்வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிராம மக்களை மீட்கும் பணியில் சுமார் 18 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

– நாகேந்திரன் வேலாயுதம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here