நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகளைப் பதிவுசெய்த மாநிலமாக சிலாங்கூர் இருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் அடர்த்தியே முதன்மைக் காரணமாகவும் இருக்கிறது.
மாநில சுகாதாரம், பெண்கள், குடும்பத்துறைக் குழுவின் தலைவர் டாக்டர் சித்தி மரியா முகமட் கூறுகையில், மக்களின் விகிதம், நோய்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தால், சிலாங்கூர் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகளைப் பதிவு செய்ய்வில்லை என்றார் அவர்.
சிலாங்கூரில் 6.5 மில்லியன் மக்கள் உள்ளனர், பெட்டாலிங் போன்ற பகுதிகள் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் பதிவு செய்திருக்கின்றன, ஏனெனில், அதன் அடர்த்தியான மக்கள் தொகையே காரணம்.
புத்ராஜெயா, கோலாலம்பூரின் பெடரல் பிரதேசத்திற்குப் பின்னால் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகளைப் பதிவு செய்யும் சிலாங்கூர், மூன்றாவது இடத்தில் இருந்தபோது இதற்கு ஒரு கட்டமும் இருந்தது என்று இன்று சிலாங்கூர் மாநில சட்டசபை அமர்வில் அவர் கூறினார்.
சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 வழக்குகள் குறித்து டத்தோ ஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கேட்ட கேள்விக்கு டாக்டர் சித்தி மரியா பதிலளித்தார்.
இதற்கிடையில், முதியவர்கள் போன்ற மாநிலத்தில் அதிக ஆபத்துள்ள பகுதிகள் மீது சோதனைகளை நடத்துவதன் மூலம் தொற்றுநோயைக் கையாள்வதில் சிலாங்கூர் ஆரம்ப நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக டாக்டர் மரியா கூறினார்.
மாநில அரசாங்கம் வெற்றிகரமாக கோவிட் பிரச்சினையைக் கையாள்வதில் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.