கோலாலம்பூர்:
மலேசிய துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது (DNAA) சரியானதாக தெரியவில்லை என்றும், அது தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று ” மலேசியாவை பாதுகாப்போம்” பேரணியின் ஒழுங்கமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அகமட் ஜாஹிட் DNAA வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதிலிருந்து வழக்கின் நிலைமைகளை சரியாக கண்காணித்துவருகிறோம், ஆனால் திடீரென அவர் விடுவிக்கப்பட்ட்து தொடர்பில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் மேலும் பல சிக்கல்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டம் என்றும் டத்தோ துன் பைசல் இஸ்மாயில் அஜீஸ் கூறினார்.
“இதனால்தான் நாங்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளோம்” என்று அவர் இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 16) டாங் வாங்கி காவல்துறை தலைமையகத்திற்கு வெளியே சந்தித்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.