அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா, சீனா மக்களிடையே அமைதியை ஏற்படுத்த முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியா சீனா இடையேயான லடாக் எல்லை பிரச்சனையில், கடந்த பல வாரங்களாக, அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்திய, சீன மக்களையும் நேசிக்கிறேன் என்ற வெடிக்காத குண்டு ஒன்றப்போட்டிருப்பதாக கிண்டலடித்திருக்கின்றனர். உண்மையில் அவரது அரசு சீனாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவாகவுமே இருந்து வந்திருக்கிறது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ இந்தியாவை ஒரு சிறந்த நட்பு நாடு என்று வர்ணித்தார். அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பர் என்று கூறினார்.
கடந்த புதன்கிழமை, வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ பேசும் போது இந்தியா அமெரிக்காவின் சிறந்த பங்காளியாக இருந்துள்ளது என்று கூறியிருந்தார்.