புத்ராஜெயா : 15ஆவது சபா மாநில சட்டசபை கலைக்கப்படுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை (ஜூலை 30) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணைய செயலாளர் இக்மால்ருதீன் இஷாக் தெரிவித்தார்.
சபா மாநில அரசியலமைப்பின் பிரிவு 21 (4) இன் படி, கலைக்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார்.எனவே, தேர்தல் நடத்துதல் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தும் என்று அவர் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இக்மால்ருடின் கூறினார். கோத்த கினாபாலுவில் மாநில சட்டசபை கலைக்கப்படுவதாக சபா முதல்வர் டத்தோஶ்ரீ முகமட் ஷாஃபி அப்டால் நேற்று அறிவித்திருந்தார். – பெர்னாமா