அடுத்த கட்டத்திற்கு சென்ற அருண் விஜய்யின் சினம்

அருண் விஜய் நடிப்புல் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘சினம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். இதற்கான பூஜை இன்று போடப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய் தனது பகுதிக்கான டப்பிங் கை பேச ஆரம்பித்திருக்கிறார்.

இப்படத்தில் பலக் லால்வாணி கதாநாயகியாகவும், காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here