இருளில் மூழ்கிய இலங்கை

இலங்கையில் இன்று மின்மாற்றி தோல்வியால் ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவை, தொழில் போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டன. சுமார் ஆறு மணி 0நேர தடைக்குப்பின் கொழும்பு, தெற்கு மாகாணம், குருனேகலா போன்ற இடங்களில் மின்சாரம் வழங்கப்பட்டது. சில இடங்களில் தொடர்ந்து மின்தடை இருந்துள்ளது.

கேரவாலபிட்டியா துணை-நிலையத்தில் மின்மாற்றி பழுதடைந்ததால் மின்சார தடை ஏற்பட்டதாக இலங்கை மின்சார போர்டு தெரிவித்துள்ளது.

மக்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்ட நிலையில், போக்குவரத்து சிக்னல் செயல்படாததால் போக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப்பட்டன. 2016-ம் ஆண்டு இதுபோன்று நடைபெற்ற மின்சார தடைக்கான சதி இல்லை என்று தெரிவித்த மந்திரி, மின்தடை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க அமைச்சகத்தின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்தடைக்கு மின்சார வாரியம் வருத்தம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here