மகாராஷ்டிரா சிறைகளில் 1345 பேருக்கு கொரோனா தொற்று

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைகளில் 1,043 கைதிகள் மற்றும் 302 காவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மகாராஷ்டிரா சிறைகளில் 596 கைதிகள் மற்றும் 167 காவலர்கள், ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக நாக்பூர் சிறையில் 219 பேரும், 57 ஊழியர்களும் அடங்குவர். மேலும் 6 கைதிகள் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here