மத்திய அமைச்சரவை புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வருட கல்வி ஆண்டிலேயே புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் நாளையில் இருந்து வருகிற 31-ந்தேதி வரை பள்ளி முதல்வர்கள், பள்ளி ஆசிரியர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரிலால் தெரிவித்துள்ளார்.
http://innovateindia.mygov.in/nep2020 இந்த இணைய தளத்தில் அவர்களின் விவரத்தை தெரிவித்து, பாடங்களை படித்து பார்க்கலாம். அதில் ஏதும் சேர்க்க, நீக்க வேண்டும் என்று கருதினால் கருத்து தெரிவிக்கலாம் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.