திருமணத்தை பற்றி மவுனம் கலைத்த விக்னேஷ் சிவன்

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள்.

இவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: “இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது எங்களுக்கு திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்கு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிக்கணும், இதை முடிக்கணும்னு சில பிளான் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் பர்சனல் லைப்புக்கு வரணும்னு நினைச்சோம்.

தற்போது எங்கள் கவனம் முழுவதும் வேலையில தான் இருக்கு. லவ் எப்ப போர் அடிக்குதுனு பார்ப்போம், அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த நேரம் வரும்போது எல்லோருக்கும் கண்டிப்பா தெரியப்படுத்துவோம்”. என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here