ஆகஸ்ட் 28ஆம் நாள் ஜோகூரில் உள்ள ஓர் இராணுவ முகாம் குடியிருப்புக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாக சந்தேகிக்கப்படும் மறைந்த ராணுவ வீர்ரான அப்துல் அஜீஸ் அஸ்னாம் உடலில் துஷ்பிரயோகம் தொடர்பான எந்த கூறுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை .
அரச மலேசிய இராணுவம் (டி.டி.எம்) தலைமையகம் நேற்று ஓர் அறிக்கையில், செப்டம்பர் 7 ஆம் தேதி ஜொகூர் பாருவின் சுல்தானா அமினா மருத்துவமனையின் நிபுணர் நடத்திய பிரேத பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவர் சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
செப்டம்பர் 6 ஆம் தேதி அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, மேலும் உடலில் வேறு எந்தவிதமான காயங்களும் இல்லை என அறியப்பட்டது..
பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்று, பிரேத பரிசோதனை செய்தனர். அறிக்கையில் சம்பவ இடத்தின் நிலைமை பாதகமாக இல்லை என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், டி.டி.எம், விசாரணைக்கு உதவ போலிஸாருக்கு ஒத்துழைப்பதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாகக் கூறினார்.
டிடிஎம் இந்த விஷயத்தை முழுமையாகப் போலீசாரிடம் ஒப்படைக்கிறது, அதே நேரத்தில், எந்தவொரு சட்டவிரோத நடத்தையிலும் ஈடுபட்ட எந்த அதிகாரிகள் , உறுப்பினர்களுடன் சமரசம் செய்யாது.