வாயில் காயத்துடன் தமிழகம், கேரளாவில் சுற்றி வந்த யானை ஒன்று உயிரிழந்தது.அவுட்டுக்காய் வெடித்ததில், அந்த யானையின் நாக்கு துண்டாகியது. தும்பிக்கை மற்றும் வாயின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டது.
யானைக்கு சிகிச்சை அளிப்பதில் பயனில்லை என தெரிவித்துவிட்டனர். இதனால், அந்த யானை காயத்துடன கோவையின் மருதமலை, ஆனைகட்டி மற்றும் கேரள பகுதிகளில் சுற்றி வந்தது. இந்நிலையில், இன்று காலை கேரளாவின் சோலையூர் பகுதியில் மரப்பாலம் என்ற இடமருகே கீழே விழுந்து இறந்தது.