சமீபத்தில் ஓணம் கொண்டாட நயன்தாரா தனிவிமானம் மூலமாக சொந்த ஊருக்கு சென்றார். இந்த செய்தியை அறிந்த கோலிவுட் வட்டாரம் வியந்துள்ளது. நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படம் ஷூட்டிங் சில நாட்கள் பாக்கியுள்ள இந்த படப்பிடிப்பை எடுக்க அதிகபட்ச பணம் தேவைப்படுவதாகவும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இதெல்லாம் உண்மையா? நயன்தாராவிடம் காசு இல்லை என்றால் நம்ப முடிகிறதா? நெற்றிக்கண் படத்தின் பாக்கியுள்ள ஷூட்டிங் முடிக்காமல் இருக்க, வேறு ஏதாவது காரணம் இருக்கும். காசு இல்லாமல் தான் நாற்பது லட்சம் செலவு செய்து தனி விமானத்தில் பறந்தார்களா? என கிசுகிசுக்க ஆரம்பித்து விட்டார்களாம் சினிமா வட்டாரம்.
புதுசா இருக்கு? நயன்தாராவிடமே காசு இல்லையா? நாற்பது லட்ச ரூபாய் செலவில், இப்போது தானே தனி விமானத்தில் ஓணம் பண்டிகைக்கு ஊருக்கு போனீங்க என பலர் புலம்பி தள்ளுகின்றனர். பணப்பற்றாக்குறையை நிறைவு செய்ய ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் வரவு வந்தால், அதனை நெற்றிக்கண் படத்தின் பாக்கியுள்ள ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தி கொள்ளலாம் என முடிவு செய்துள்ளாராம் விக்னேஷ் சிவன்.