எம்சிஓ காலகட்டத்தில் நள்ளிரவு வரை செயல்பட்டு வந்த கேளிக்கை மையத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 183 பேர் கைது செய்யப்பட்டனர்.
எம்சிஓ காலகட்டத்தில் நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே கேளிக்கை மையங்கள் இயங்கலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. அரசாங்கத்தின் அறிவிப்பை புறக்கணித்து நள்ளிரவு 1.30 மணி வரை பெவிலியன் அருகே இயங்கி வந்த கேளிக்கை மையத்தில் போலீசார் நேற்று நள்ளிரவு சோதனை நடத்திய கோலாலம்பூர் குற்ற புலனாய்வு துணைத்தலைவர் ஏசிபி ரோஷான் ஷா அமாட் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 183 பேரும் மேலும் 12 ஊழியர்களையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அதை தவிர்த்து 2 அந்நிய நாட்டவர்கள் சரியான தஸ்தாவேஸ்கள் இல்லாதவர்களும் கைது செய்து செய்தவர்களில் அடங்குவர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் டாங் வாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் விவரங்களை சேகரித்த பின்னர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
படங்கள்: எல்.கே.ராஜ்