பெட்டாலிங் வட்டாரத்தில் திருட்டு மோட்டார் சைக்கிள் விற்று வந்ததாக நம்பப்படும் 28 வயது உள்நாட்டு ஆடவரை கடந்த 9.9.2020 அன்று பெட்டாலிங் ஜெயா போலீசார் கைது செய்துள்ளனர். தாமான் மேடான் ஒரு வீட்டில் கைது செய்யப்பட்ட அந்நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு
என்றும் அம்மோட்டார் காணாமல் போனதாக சுங்கை பீசியில் காவல் நிலையத்தில் புகார் இருப்பதோடு அந்நபர் மீது கற்பழிப்பு உள்ளிட்ட குற்றப்பதிவுகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அந்நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் போர்ட் கிள்ளான் கம்போங் பாரு தெலுக்கோங் வட்டாரத்தில் அன்று இரவு 10.50 மணியளவில் ஒரு ஆடவரையும் 10.9.2020 நள்ளிரவு 1.45 மணியளவில் ஶ்ரீ கெம்பாஙான் தாமான் இம்பியான் ஏசான் வட்டாரத்தில் மற்றொரு ஆடவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதிற்கும் 36 வயதிற்கும் உட்பட்டவர்களாவர்.