ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5-ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று நண்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் பகுதியில் இன்று நண்பகல் 12.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்திற்கு ரிக்டர் அளவு கோளில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

சில நிமிடங்கள் நீடித்த இந்த நிலநடுக்கம் காரணமாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் சற்று அதிர்ந்தன. இதனால் மக்கள் சற்று பதற்றம் அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here