வேலூரில் தந்தை, மகள் கழுத்தறுத்து படுகொலை

ஜார்தாகொல்லைமலை கிராமத்தை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரது மனைவி பாஞ்சாலை. பொன்னுச்சாமி 10 வயது மகள் தீபாவுடன் ரங்கப்பன்கொட்டாய் பகுதியில் அன்வர்பாஷா என்பவரது விவசாய நிலத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், ஒரே வீட்டில் அவர் மட்டும் தனி அறையிலும், தந்தையும், மகளும் தனி அறையிலும் தங்கியிருந்துள்ளனர்.

காலை நேரத்தில் பொன்னுச்சாமி வெகுநேரமாகியும் வெளியே வராதால் அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, தந்தையும், மகளும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.

மற்றொரு அறைக்குள் படுத்திருந்த மனைவிக்கும் எதுவும் ஆகவில்லை. சம்பவ இடத்திற்கு வடக்கு மண்டல டிஜஜி, ஏஎஸ்பி உள்ளிட்டோர் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here