உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி செய்ய அனுமதி அளித்துள்ளது. தற்போதுவரை ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா காரணமாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் தங்கள் ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி வரை அலுவலகத்துக்கு வர வேண்டாம் என ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பன்னாட்டு நிறுவனமான ‘மைக்ரோசாப்டு’ நிலையில், குறிப்பிட்ட சில பணியாளர்கள் விரும்பினால் அவர்கள் நிரந்தரமாகவே வீட்டிலிருந்து பணியாற்றலாம் என தற்போது அறிவித்துள்ளது.