‘கொரோனா’ மருத்துவ கழிவுகள்….

கடந்த நான்கு மாதங்களில் இந்தியா 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது.

அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சுமார் 5,500 டன் கொரோனா கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இது, ஒரு மாதத்திற்கு அதிகபட்சம்.

மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஜூன் முதல், அனைத்து மாநிலங்களும் 18,006 டன் கொரோனா தொடர்பான உயிரியல் மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்துள்ளன. அவை, பொதுவாக உயிரியல் கழிவு சுத்திகரிப்பு வசதிகளால் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன.

கொரோனா மருத்துவ கழிவுகள்:-

கொரோனா கழிவுகளில் பிபிஇ கருவிகள்,முகக்கவசங்கள், கையுறைகள், பிபிஇ கிட் போன்ற , காட்டன் ஸ்வாப்ஸ், இரத்தம் அல்லது உடல் திரவத்தால் மாசுபட்ட படுக்கைகள், இரத்த பைகள், ஊசிகள், சிரிஞ்ச்கள் ஆகியவை அடங்கும்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின்படி:-

ஜூன் முதல் நான்கு மாதங்களில் மகாராஷ்டிராவில் 3,587 டன் கொரோனா கழிவுகளை உற்பத்தி செய்தது, அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு (1,737 டன்), குஜராத் (1,638 டன்), கேரளா (1,516 டன்), உத்தரபிரதேசம் (1,432 டன்), டெல்லி ( 1,400 டன்), கர்நாடகா (1,380 டன்), மேற்கு வங்கம் (1,000 டன்) உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here