அமெரிக்காவில் படித்து முடித்த கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர், பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது சுல்தான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கார்த்திக்கு தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Dear friends and family, we are blessed with a boy baby. We can’t thank enough our doctors and nurses who took us through this life changing experience. 🙏🏽 need all your blessings for the little one. Thank you god!
— Actor Karthi (@Karthi_Offl) October 20, 2020
கார்த்திக்கும் – ரஞ்சனிக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு இத்தம்பதிக்கு உமையாள் என்ற பெண்குழந்தை பிறந்தது. தற்போது 7 ஆண்டுகள் கழித்து இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்த்தி, “எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்வை மாற்றும் அனுபவத்தின் மூலம் எங்களை அழைத்துச் சென்ற எங்களுடைய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவிப்பது மட்டும் போதுமானது அல்ல. பிறந்த குழந்தைக்கு உங்கள் அனைவருடைய வாழ்த்துகளும் தேவை. நன்றி..” என்று கூறியுள்ளார்.