அவசர நிலை இல்லாத போதும் தயார் நிலையில் இராணுவம்

நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்று மாமன்னர் கூறியிருந்த போதிலும்  இராணுவம் எப்போதுமே தயார் நிலையில் உள்ளது.

பாதுகாப்புப் படையின் தலைவர் டான்ஸ்ரீ அஃபெண்டி புவாங், ராணுவ வீரர்களை நிலைநிறுத்துவது வழக்கம் போல் நடக்கும் என்றார்.

நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அல்-சுல்தான் அப்துல்லா கூறியதாக செய்தி வெளியிப்பட்டது.

பிரதமர் முஹிடீன் யாசின் முன்வைத்த கோரிக்கையை கவனமாக ஆராய்ந்து, மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்துரையாடியபின் அல்-சுல்தான் அப்துல்லா இந்த முடிவை எடுத்ததாக இஸ்தானா நெகாராவின் டத்தோ அஹ்மட் ஃபாடில் ஷம்சுடீன் தெரிவித்தார்.

மலாய் ஆட்சியாளர்களின் சிறப்புக் கூட்டம் இங்குள்ள இஸ்தானா நெகாராவில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here