‘5ஜி சேவையில் சீனாவை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை’

இந்தியாவில் 5ஜி சேவையில், சீன நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என மத்திய உள்துறை செயலர் அஜய்குமார் பல்லா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: நாட்டில், 5ஜி சேவையை துவங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் சீனாவை அனுமதிப்பது பற்றி, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. நாட்டின் தொலை தொடர்புத்துறையின் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு கடமைப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை கருத்தில் வைத்தே, இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, சீனாவின் ஹூவாவே நிறுவன செயல்பாட்டுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. மேலும் சீன தொலைதொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், பிற நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தியாவில் நடைபெறவுள்ள 5ஜி சோதனையில், ஹூவாவே நிறுவனம் பங்கேற்க அனுமதிப்பது குறித்து, இந்தியா தனது இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here