மாநிலம்தான் கோயில். மக்கள்தான் தெய்வம்

மத்திய பிரதேசம்தான் என் கோயில், மாநில மக்கள்தான் என் தெய்வம் நான்தான் அவர்களின் பூசாரி என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின்  முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. செஹோர் மாவட்டத்தில் பா.ஜ.க. கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட சிவ்ராஜ் சிங் சவுகான் பேசுகையில் கூறியதாவது,  பா.ஜ.க. மக்களுக்கு சேவை செய்வதில் எந்த வாய்ப்பையும் விட்டு விடாது. நான் அனைத்து அரசு திட்டங்களையும் மீண்டும் தொடங்குவேன் என்று வாக்குறுதி அளித்தார்.

முதல்வரின் விவசாயிகள் நலத்திட்டத்தின்கீழ், விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் பெறுவார்கள். மத்திய பிரதேசம்தான் என் கோயில். மாநில மக்கள்தான் என் கடவுள். நான்தான் அவர்களின் பூசாரி. அனைவரும் தங்களது மகன்கள், மகள்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும்.

அது ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., மருத்துவம் அல்லது எதுவாக இருந்தாலும், அவர்களால் (பெற்றோர்கள்) கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றால், அதை மாநில அரசு பார்த்து கொள்ளும். உங்கள் ஆசிர்வாதத்தால்தான் நான் முதல்வராகி உள்ளேன். நான் உங்களை வணங்குகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

கமெண்ட்: மக்கள்தாம் கடவுள், வணங்கினால் ஆதரவு உண்டு என்பது அறிவு !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here