நியுயார்க்:
இந்த ஆய்வு அறிக்கையில்-
* கொரோனாவின் கடுமையான நீண்டகால விளைவுகள், கூடுதலாக 20 கோடியே 70 லட்சம்பேரை கொடிய வறுமையில் தள்ளிவிடும். இதன் காரணமாக 2030- ஆம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்தம் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும்.
* கொரோனாவால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் 80 சதவீதம், உற்பத்தித்திறன் இழப்பு காரணமாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
* வறுமைக்கு கொரோனா ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் தலைவர்கள் எடுக்கிற முடிவுகள், உலகை மிகவும் மாறுப்பட்ட திசைகளில் கொண்டு செல்லக்கூடும்.
* நிலையான வளர்ச்சி இலக்குகள், 14 கோடியே 60 லட்சம் பேரை தீவிர வறுமையில் இருந்து வெளியேற்றும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.