எவரெஸ்ட் உயரம் என்ன? சீனாவுக்கு வந்தது சந்தேகம்

இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் என்ன என்று சீனாவுக்கு திடீரென்று சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்திருக்கிறது நேபாளம்.
அதன்படி, எவரெஸ்டின் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டர் என்று இதுவரை கூறப்பட்டு வந்த நிலையில், 0.86 மீட்டர் உயர்ந்து இனிமேல் 8,848,86 மீட்டராக இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.

உலகின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் என்றும், அதன் உயரம் 8 ஆயிரத்து 848 மீட்டர் என்றும் இதுவரை அறியப்பட்டிருக்கிறது. ஆனால், நேபாளத்தையே உலுக்கி எடுத்த அந்த 2015  ஆம் ஆண்டு பூகம்பத்திற்குப் பிறகும் இதே அளவுதான் இருக்குமா என்ற சந்தேகம் நேபாளத்திற்கு வந்தது. சீனாவும் இதே சந்தேகத்தை எழுப்பியது.

இதனால் எவரெஸ்ட் சிகரத்தினை மீண்டும் அளவிட வேண்டுமென்று சீனாவும், நேபாளமும் முடிவெடுத்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் சீன அதிபர் ஜிஜின்பிங்கின் நேபாள பயணத்தில் இரண்டு நாடுகளும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

நேபாள அதிகாரிகளும் நிபுணர்களும் எவரெஸ்ட்டின் ஒரு புறம் அளவிட்டு வந்த நிலையில், திபெத்திய பக்கத்தில் இருந்து சீனாவும் எவரெஸ்ட் உயரத்தை அளவிட்டு வந்தது.

நேபாளமும். சீனாவும் எடுத்த அளவுகளை கொண்டு இன்று இரு நாடுகளும் இணைந்து எவரெஸ்ட்டின் உண்மையான உயரத்தை அறிவித்தன.

எவரெஸ்டின் உயரம் 8 ஆயிரத்து 848 கிலோ மீட்டர் என்று 1954 ஆம் ஆண்டில் சர்வே ஆப் இந்தியா அறிவித்த நிலையில், தற்போது 2020  ஆம் ஆண்டில் சீனாவும், நேபாளமும் இணைந்து எவரெஸ்டின் புதிய உயரத்தை 8,848,86 மீட்டர் என்று அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here