இந்திய 100 பணக்கார பட்டியலில் இடம்பிடித்த சத்தியமங்கலம் பெண்.!

ஆணுக்கு பெண்கள் எப்போதும் சளைத்தவர்கள் அல்லர் என பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். ஆண்களுக்கு சரி சமமாக பெண்களும் பல சாதனைளில் சாதித்துக் காட்டியுள்ளனர்.

அரசியலாகட்டும், ஆராய்ச்சி துறையாக இருக்கட்டும், விண்வெளி துறையாக இருக்கட்டும், ராணுவ துறை, தொழில் முனைவோர்களாக இருந்தாலும் பெண்களின் சாதனை பட்டியல் மிக நீளமாக சென்று கொண்டே இருக்கிறது.

தற்போது, அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இது நம்பும்படியாக உள்ளதா? என பலர் கேட்கலாம். ஆம் இதனை நம்பித்தான் ஆக வேண்டும்.

பட்டியலில் இடம் பிடித்த சத்தியமங்கலம் சாதனை பெண்ணின் சொத்து மதிப்பு ஒரு கோடி அல்லது 3 கோடி அல்ல. 2 ஆயிரத்து 870 கோடி ஆகும். அந்த சாதனை பெண்ணின் பெயர் டாக்டர் வித்யா வினோத். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி ஆகும்.

இத்தகவலை, கோட்டக் வெல்த் மற்றும் ஹூரான் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. டாக்டர் வித்யா வினோத், துபாயை தலைமை இடமாக கொண்ட ஸ்டடி வேர்ல்டு எஜுகேசன் ஹோல்டின் குழுமத்தின் நிறுவனர், தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

இவருடைய கணவர் வினோத் நீலகண்டம் அதன் தாளாளராகவும், மூத்த சகோதரர் கார்த்திகேயன், நிர்வாக அறங்காவலராகவும் உள்ளனர்.

டாக்டர் வித்யா வினோத் இந்தியாவின் 8 ஆவது இடம் பிடித்த பெண் சுய தொழில்முனைவோர் ஆவார். தகவல் கோட்டக் வெல்த், ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த பட்டியலில் உள்ள 100 பணக்கார பெண்களில் 36 பேர் சுயமாக வளர்ந்த பணக்காரர்கள் என்றால் அது மிகையாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here