சியோல்:
கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வந்துள்ள நாடு தென் கொரியா. ஆனாலும் தற்போது அங்கு கொரோனா வைரசின் 2- ஆவது அலை பரவி வருகிறது.
இந்த நிலையில் பிற நாடுகளின் முடிவைப் பொறுத்தே கொரோனா தடுப்பூசியை தங்கள் மக்களுக்கு செலுத்துவோம் என தென்கொரியா அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் சுங் சைக்யூன் கூறுகையில் “கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்த அனுமதித்து வருகின்றன.
எங்கள் அரசை பொறுத்தவரை எங்கள் குடிமக்களின் பாதுகாப்புதான் முக்கியம். பிற நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகளின் முடிவுகளை ஆராய்ந்து வருகிறோம்.
அதனை தொடர்ந்து, எங்கள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க முடிவு செய்வோம். நாங்கள் இதில் கவனமாக இருக்கிறோம் என கூறினார்.