சான் ஜுவான்-
கரீபியன் தீவுகளில் ஒன்றான பியூர்டோ ரிகோவில் 1 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. மேலும் 1,200-க்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரத் தேவைக்கு பயன்படுத்த பியூர்டோ ரிகோ அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதனைth தொடர்ந்து நேற்று பியூர்டோ ரிகோவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. பியூர்டோ ரிகோவில் முதன் முதலில் 2 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த யஹைரா அலிசியா என்ற பெண் டாக்டருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக டாக்டர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.