ஜெனீவா-
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 218 நாடுகள்- பிரதேசங்களுக்குப் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டபோதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 52 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 6 லட்சத்து 83 ஆயிரத்து 23 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவற்றில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 995 பேருக்கும், பிரேசிலில் 68 ஆயிரத்து 832 பேருக்கும், இங்கிலாந்தில் 35 ஆயிரத்து 383 பேருக்கும், ஜெர்மனியில் 30 ஆயிரத்து 951 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 10 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 கோடியே 52 லட்சத்து 23 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 2 கோடியே 7 லட்சத்து 51 ஆயிரத்து 3 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 136 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.