ஜெருசலேம்-
இந்நிலையில் ஜெருசலேம் நகரில் உள்ள புகழ்பெற்ற மசூதியின் முன்பு இஸ்ரேல் போலீசார் நேற்று வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கையில் துப்பாக்கியுடன் வந்த பாலஸ்தீன வாலிபர் ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அங்கு பதற்றம் உருவானது.
அதனைத் தொடர்ந்து அந்த பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அதன் பின்னர் இஸ்ரேல் போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று ஓர் இடத்தில் சுற்றி வளைத்தனர்.
அப்போது அந்த வாலிபர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மீண்டும் போலீசாரை சுட முயற்சித்தார். இதனால் போலீசார் அவரை சுட்டு வீழ்த்தினர்.