புத்ராஜெயா: நாட்டில் இன்று 2,295 புதிய கொரோனா சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 117, 373 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே வேளை ஒரே நாளில் 3,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுநாள் வரைக்குமான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94, 492 ஆக உயர்ந்துள்ளது.
இந்நோய்த் தொற்றினால் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 483 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது 22, 398 பேருக்கு தொற்று உள்ளது. இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 பேருக்கு வெண்டிலேட்டர் ஆதரவு தேவைப்படுகிறது.