ஜியோ
டில்லியில் விவசாயிகள் போராட்டம் 40- ஆவது நாளை எட்டியுள்ளது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2021 முதல் கேரள மாநிலத்தில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது. மேலும் அரசின் நெட்வொர்க், மொபைல் போன்களை ஜியோவை விட மிகக்குறைந்த கட்டணத்தில் வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வைரல் பதிவுகளில், `மோடி , அம்பானிக்கு கடும் பதிலடி கொடுக்கும் அதிரடி நடவடிக்கைகை கேரள அரசு கொடுத்துள்ளது.
புத்தாண்டு முதல் ஜியோ இணைய சேவைகள் கேரளாவில் நிறுத்தப்படுகிறது. அரசின் சொந்த நெட்வொர்க், கேரள பைபர் நெட் போன் ஜியோவை விட பாதிக் கட்டணத்தில் வழங்கப்படுகிறது.’ என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.