அபுதாபி-
இதனால் மக்கள் சேவைகளில் பணியாற்றும் அவர்கள் மூலம் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சுகாதார பாதுகாப்பு கருதி அனைத்து வழிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அரசு அலுவலகங்களில் முழு நேரமாக பணியாற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைத்து ஊழியர்களும், 2 வாரங்களுக்கு ஒருமுறை அதாவது 14 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயம் கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் பி.சி.ஆர். சோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும்.
ஆலோசனை, நிபுணர் சேவைகளில் பணியாற்றுவோர் மற்ற அரசு அலுவலகங்களுக்கு செல்லும்போது குறைந்தது 3 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வகையிலான கொரோனா பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகளுக்காக ஆகும் செலவீனங்களை அந்தந்த அரசுத்துறை ஊழியர்களே ஏற்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கான இந்த கட்டாய கொரோனா பரிசோதனை முறையானது, வரும் 17- ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.