பொங்கிடும் அனைத்தும் மண்ணின்
பொன்மணி விளைச்சல் தானே!- நிலம்,
தங்கிடும் உயிர்க ளெல்லாம்,
தந்ததும் உழைப்பைத் தானே!
வெந்திடும் பொங்கல் எல்லாம் ,
வெற்றியின் வியர்வை யாகும்- அதோ!
வந்திடும் பொங்கல் நாளை
வணங்குதல் நன்றி யாகும்!
யந்திர வாழ்க்கை யாகி ,
யாதுமாய் ஆகி விட்ட- மக்கள்
வெந்திடும் உணவு அற்றால்,
வேதனை அடைவ துண்மை!
நிலத்தையே நம்பி வாழும்,
நிலைதான் அற்றுப் போனால் – யந்திரம்
விளைச்சலைத் தருமா சொல்வீர்!
விதியென இருத்தல் மேலா?
நிலம்தரும் பயிர்கள் இன்றி,
நிம்மதி வருவ தில்லை- -பயிர்,
வளர்ச்சிதான் உயிர்கென் றாகும்!
வயற்றுக் குணாவாய் மாறும்!
பசித்தவன் நிறைத்துக் கொண்டால்
பட்டினி என்ப தில்லை!- தினம் ,
புசித்திட நேர்ந்து விட்டால்,
புலர்வெலாம் பொங்க லாகும்!
மண்ணையே அன்னை என்பர்,
மகிழ்வுறக் போற்று வார்கள்!- விண்ணையும்
மண்ணையும் நம்பித தானே!
வியத்தகு உலகு ஓங்கும்!
உழுதிட விளைச்சல் காட்டும்
உன்னத பூமி போல- கற்கப்
பழுதிலா தமிழைப் பெற்றால்,
தக்கதாய் பொங்கும் வாழ்க்கை!
வீ.கா.அருண்மொழி