பங்கோய்:
மத்திய ஆப்பிரிக்கா குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரும் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபராக உள்ள ஃப்ஸ்டின் அர்ஜேன்ஜ் டுவாடரா 2- ஆவது முறையாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால், 2013- ஆம் ஆண்டு ஆட்சியை பறிகொடுத்த முன்னாள் அதிபர் பிரான்கோஷ் பெசினி தற்போது நடந்த தேர்தலில் தான் பெற்ற தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அவர் கிளர்ச்சியாளர்களுடன் கூட்டுச்சேர்ந்துகொண்டு அரசுப்படையினர் மீதான தாக்குதலுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
இந்நிலையில், மத்திய ஆப்பிரிக்கா நாட்டின் பங்கோய் மாகாணத்தில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிமரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐநா அமைதிப்படையினரை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் ஐநா அமைதிப்படையினர் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐநா சபை தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.