கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.
படப்பிடிப்பு முடிந்தாலும், இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிய 10 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் இந்தாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அயலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.