மூவார்:
மூவார் நகர மையத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் செய்த குற்றச்சாட்டில் 27 முதல் 42 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (ஜன. 6) இரவு 7.15 மணிக்கு ஜோகூர் மற்றும் மூவார் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய சோதனையின்போது, இவர்கள் கைது செய்யப்பட்டதாக முவார் ஓசிபிடி துணை ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அஜீஸ் தெரிவித்தார்.
சியாபு என நம்பப்படும் RM68,000க்கு மேல் மதிப்புள்ள 2 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்தோடு சந்தேக நபர்கள் அனைவரும் மூவாரில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட சிறுநீர் பரிசோதனையில், இருவர் மெத்தாம்பேட்டமைனுக்கு சாதகமான பதிலைப் பெற்றனர் மற்றும் அவர்களுக்கு முந்தைய போதைப்பொருள் மற்றும் குற்றவியல் குற்றங்கள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்ததாகவும், சந்தேக நபர்கள் தற்போது முதல் சனிக்கிழமை (ஜனவரி 13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.








