இந்த விழாவில் சிறப்பு விருந்தினர் இன்றி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இந்த வருடம் 25 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 15 வயதிற்கு உள்ள குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தின விழா அணிவகுப்பு தூரம் குறைக்கப்பட்டுள்ளது.
இன்றைய குடியரசு தின அணி வகுப்பு விழாவில் முதல் முறையாக வங்கதேச ராணுவ வீரர்கள் பங்கேற்கயுள்ளனர். வங்க தேசம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் 122 ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்கின்றனர்