தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை: பிரேசில் அரசு அறிவிப்பு..!!

பிரேசிலா:
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகள் பட்டியலில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் 88 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கடந்த டிசம்பரில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக இங்கிலாந்து உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவித்தது.

70 மடங்கு வேகமாக பரவும் திறன் கொண்டதாக புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இங்கிலாந்து உடனான விமானப் போக்குவரத்தை பல்வேறு நாடுகளும் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தின. எனினும், புதிய வகை கொரோனா 12 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது. அதேபோல், தென் ஆப்பிரிக்காவிலும் மற்றொரு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டது.

புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து விமானங்களுக்கு பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. மேலும், இங்கிலாந்து விமானங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here