கோவை:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கோவையில் அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது,
இலங்கை கடற்படை தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை கொன்றனர். அதை மத்திய அரசு கண்டும், காணாமல் இருக்கிறது.
நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையில் தமிழக கவர்னர் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்றார்.