–மெக்சிகோவில் துயரச் சம்பவம்
தொழில் போட்டி காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்வதால் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.
இந்தநிலையில் ஜலிஸ்கோவின் வடக்கு பகுதியில் உள்ள குவாடலஜாரா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு 10 ஆண்கள் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்து இறங்கிய மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச் சென்றனர். போலீசார் படுகாயம் அடைந்த பெண் மற்றும் 2 சிறுவர்களை வீட்டில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தாக்குதல் நடத்திய நபர்கள் யார் தாக்குதலின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.