– 50 ஆவது நாளைக்கொண்டாடும் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக 50-வது நாளை எட்டியுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின.
இந்நிலையில், மாஸ்டர் படம் வெற்றிகரமாக 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகளவில் ரூ.263 கோடி வசூல் செய்துள்ள இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.217 கோடி வசூலித்துள்ளது. குறிப்பாக தமிழ்நட்டில் மட்டும் ரூ.145 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் 50-வது நாளில் அதிக திரையரங்குகளில் ஓடும் தமிழ் திரைப்படம் என்கிற சாதனையையும் மாஸ்டர் படைத்துள்ளது. இப்படம் 156 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதற்கு முன் சந்திரமுகி திரைப்படம் 50-வது நாளில் 134 திரையரங்குகளில் ஓடியதே சாதனையாக இருந்தது. தற்போது மாஸ்டர் அதை முறியடித்துள்ளது.