–. அசத்துகிறார் ஷாலினி விலாஸ்
10-ஆம் வகுப்பு கூட தாண்டாத பெண்ணாண ஷாலினி விலாஷூக்கு, குடும்பத்தை பாதுகாக்க எங்கு சென்றாலும் வேலை கிடைக்கவில்லை. 3 குழந்தைகளுக்குத் தாயாக இருந்து கொண்டு, குடும்ப பாரத்தை முழுவதையும் கணவர் மீது சுமத்த விரும்பாத அவர், கிராமப்புற பெண்களின் வாழ்வாதார உயர்வுக்காக பணியாற்றும் ஸ்வதேஷ் பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சமூகப்பணியாற்றும் நபராக 2014-ஆம் ஆண்டு இணைத்துக்கொண்டார்.
தற்போது அவர்களின் கால்நடைப் பண்ணையில் 6 எருமை மாடுகள் உள்ளன. நாள்தோறும் 45 முதல் 50 லிட்டர் பாலை கறந்து விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் அவர்களது குடும்பம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வருமானமாக பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது, தனிநபர் சேமிப்பு மூலம் குழந்தைகளின் கல்விக்கு செலவழித்து, இரண்டு மகள்களை திருமணம் செய்து கொடுத்துள்ளார், மகனை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். தற்போது தேர்ந்த கல்வியாளர்போல் இருக்கும் அவர், பல்வேறு கிராமப்புற பெண்களுக்கு கல்வி, சட்டம், சுகாதார அமைப்பு மற்றும் பொருளாதாரம் குறித்து பாடம் எடுக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.
பெண்களின் வளர்ச்சி குறித்து அவர்களிடையே ஷாலினி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஷாலினி வாழும் கிராமத்தில் சாதி பாகுபாடு இருப்பதால், தனது வீட்டில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த ஒருவரை பணிக்கு அமர்த்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் இருந்து வருகிறார்.
அஷ்மிதா யோஜானா (Asmita Yojana) என்ற பெண்கள் குழு ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக ஷாலினி செயல்பட்டு வருகிறார். அந்த அமைப்பின் மூலம் கிராம்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கும் வகையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் தொழிலை உருவாக்கிக்கொடுத்தல் உள்ளிட்ட தொழில்களை அமைத்து கொடுத்து வருகிறார். பெண்கள் சுகாதாரம் , மாதவிடாய் குறித்தும் ஷாலினி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.